settings icon
share icon
கேள்வி

இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உண்மையா?

பதில்


வேத வாக்கியங்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலைக் குறித்து முழுமையானச் சான்றுகளை அளிக்கிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் குறித்து மத்தேயு 28:1-20, மாற்கு 16:1-20 லூக்கா 24:1-53 மற்றும் யோவான் 20:1-21:5 ஆகிய வேத பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த இயேசு அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்திலும் தரிசனம் ஆனார் (அப்போஸ்தலர் 1:1-11). இந்த வாக்கியங்களிலிருந்து இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்ததற்கு அநேக ”சாட்சிகள்” நமக்கு கிடைக்கும். முதலாவது சீஷர்களுடைய வியப்பூட்டுகிற மாற்றம். ஒரு கூட்டமாய் பயந்து ஒளிந்து இருந்ததிலிருந்து திடமான, தைரியமான சாட்சிகளாய் உலகமுழுவதிலும் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களானார்கள். இந்த வியப்பூட்டுகிற மாற்றத்தை உயிர்தெழுந்த இயேசு அவர்களுக்கு தரிசனமாகிய நிகழ்ச்சிதான் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இரண்டாவது அப்போஸ்தலனாகிய பவுலுடைய வாழ்க்கை. எந்த செயல் அப்போஸ்தலனாகிய பவுலை, சபையை துன்புறுத்துபவனாய் இருந்ததிலிருந்து சபையின் அப்போஸ்தலனாக மாற்றியது? உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவருக்கு தமஸ்கு போகிற வழியில் தரிசனமானதுதான். (அப்போஸ்தலர் 9:1-6). மூன்றாவது உறுதியானச்சான்று காலியாயிருந்த கல்லறைதான். ஒருவேளை கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால் அவருடைய சரீரம் எங்கே? சீஷர்களும் மற்றவர்களும் அவர் அடக்கம்பண்ணப்படும்போது கல்லறையை கண்டார்களே. அவர்கள் மறுபடியும் வரும்பொது, அவருடைய சரீரம் அங்கே இல்லை. தூதர்கள் “அவர் இங்கே இல்லை, தான் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்,” என்று கூறினார்கள். நான்காவது அவர் அநேகருக்கு தரிசனமானதும் அவருடைய உயிர்தெழுதலுக்கு சாட்சியே (மத்தேயு 28:5,9, 16-17; மாற்கு 16:9; லூக்கா 24:13-35;யோவான் 20:19,24,26-29, 21:1-14; அப்போஸ்தலர் 1:6-8; I கொரிந்தியர் 15:5-7).

வேறொரு சான்று என்னவெனில், அப்போஸ்தலர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவமும் ஒரு சான்றுதான். இயேசுவின் உயிர்த்தெழுதலுடைய முக்கிய வேதபகுதி 1 கொரிந்தியர் 15. இந்த அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை புரிந்துகொண்டு நம்புவது எவ்வளவு இன்றியமையாதது என்று விளக்கியுள்ளார். உயிர்த்தெழுதல் கீழ்வரும் காரியங்களினால் முக்கியமானதாக இருக்கிறது: 1) கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழாதிருந்தால் விசுவாசிகளும் உயிர்த்தெழ இயலாது (I கொரிந்தியர் 15:12-15). 2) கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழாதிருந்தால் அவர் பாவத்தின் பரிகாரத்திற்கு தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தது போதுமானதில்லை என்று ஆகியிருக்கும். (I கொரிந்தியர் 15:16-19). இயேசுவின் உயிர்த்தெழுதல் தேவன் அவருடைய மரணத்தை நம்முடைய பாவத்திற்காக பாவநிவாரணமாக ஏற்றுக்கொண்டார் என்று தெளிவுப்படுத்துகிறது. அவர் ஒருவேளை மரித்து மரித்தவர்களோடு இருந்திருப்பாரானால் அவருடைய மரணம் போதுமானதாக இருந்திருக்காது. அதன் விளைவாக விசுவாசிகள் பாவம் மன்னிக்கப்படாமல், அவர்கள் இறந்தப்பின்பும் மரித்தவர்களாகவே இருந்திருப்பார்கள் (I கொரிந்தியர் 15:16-19). நித்திய ஜீவன் என்கிற ஒன்றும் இருந்திருக்காது (யோவன் 3:16) “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்’’ ( I கொரிந்தியர்15:20).

இறுதியாக, வேதவாக்கியம் இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனுக்காக அவர் உயிர்த்தெழுந்தது போலவே மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று தெளிவாகிறது (I கொரிந்தியர் 15:20-23). 1 கொரிந்தியர் 15-வது அதிகாரம் மேலும் அவர் பாவத்தை எப்படி வென்று நமக்கும் பாவத்தை மெற்கொண்டு ஜெயத்தோடு வாழ்கிற வல்லமையைக் கொடுத்திருகிறார் என்பதை விளக்குகின்றது. (I கொரிந்தியர்15:24-34). அது நாம் பெறப்போகிற மகிமையான உயிர்த்தெழுதலின் சரீரத்தைக் குறித்து விளக்குகின்றது. ( கொரிந்தியர் 15:35-49). மேலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால், அவரை விசுவாசிக்கிறவர்கள் யாவரும் மரணத்தின்மீது ஜெயம் எடுப்பார்கள் என்றும் கூறுகின்றது. (I கொரிந்தியர் 15:50-58).

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்ன ஒரு மகிமையான சத்தியமாக இருக்கிறது! “ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” (I கொரிந்தியர் 15:58) . வேதாகமத்தின்படி இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு நிதர்சனமான உண்மையாகும். வேதம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பதிவு செய்கின்றது. மேலும் 400க்கும் மேற்பட்ட சாட்சிகளும், இயேசுவின் உயிர்தெழுதலின் உண்மையின் மீது மிகவும் முக்கியமான கிறிஸ்தவ அடிப்படை உபதேசத்தைக் கட்டி எழுப்புயுள்ளது.

English



முகப்பு பக்கம்

இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உண்மையா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries