settings icon
share icon
கேள்வி

கலப்பினத்திருமணத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


கலப்பினத் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிட்டது (உபாகமம் 7:3-4). இருப்பினும், இதற்கான அடிப்படை காரணம் தோளின் நிறமோ இனமோ அல்ல மாறாக மதம் சார்ந்ததாகும். தேவன் மற்ற இனத்தாருடன் சம்பந்தங்கலவாதிருக்கும்படிக் கட்டளை கொடுத்ததின் பிரதான நோக்கம் அவர்கள் விக்கிரகாராதனைக்காரர்களும் பொய்யான தெய்வங்களை வணங்குகிறவர்களுமாய் இருந்ததுதான். விக்கிரகாரதனைக்காரர்கள், அந்நிய தெய்வங்களை வணங்குகிறவர்கள், மற்றும் புறஜாதியாருடனும் கலப்புத்திருமணம் செய்தால் இஸ்ரவேலர்கள் கர்த்தரைவிட்டு விலகிப் போவார்கள். மல்கியா 2:11ன்படி இஸ்ரவேலர்களுக்கு இதுதான் சபவித்தது.

ஆவிக்குரிய பரிசுத்தத்தைக் குறித்து இதைப்போன்ற ஒரு கோட்பாடுதான் புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது என்றாலும், இனத்தைக் குறித்து அல்ல: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (2 கொரிந்தியர் 6:14). இஸ்ரவேலர்கள் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங்கொண்டவர்கள்) விக்கிரகாராதனைக்காரர்களைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று கட்டளையிடப்பட்டதைப் போலவே, கிறிஸ்தவர்களும் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங்கொண்டவர்கள்) அவிசுவாசிகளைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கட்டளை பெற்றனர். கலப்புத்திருமணம் தவறு என்று வேதாகமத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. யாராவது அப்படி கலப்பினத்திருமணத்தை தடைபன்ணினால் அது வேதாகமத்தின் அதிகாரத்திற்குட்பட்டது அல்ல.

மார்ட்டின் லூத்தர் கிங் சொன்னதைப் போலவே, ஒரு மனிதன் அவனுடைய அல்லது அவளுடைய குணத்தை வைத்து நியாயந்தீர்க்கப்பட வேண்டுமேயல்லாமல் அவருடைய நிறத்தை வைத்து அல்ல. இனத்தை வைத்து பாரபட்சம் காண்பிப்பதற்கு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் அதற்கு இடமேயில்லை (யாக்கோபு 2:1-10). துணையைத் தெரிந்தெடுக்கும்பொழுது, தன்னை மணம் செய்துகொள்ளப்போகிறவர் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசங்கொண்டு மறுபடியும் பிறந்தவரா என்பதை ஒரு கிறிஸ்தவர் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். துணையை தெரிந்தெடுக்க வேதாகமம் கூறும் தரம் கிறிஸ்துவில் நம்பிக்கை, நிறமல்ல (யோவான் 3:3-5). கலப்பினத்திருமணம் சரியா தவறா என்ற காரியமல்ல, மாறாக, அது ஞானத்தையும், பகுத்தறிதலையும் ஜெபத்தையும் குறித்தது.

திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் அநேக காரியங்களை நிறுத்துப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தோளின் நிறத்தைக் குறித்த காரியம் முற்றிலுமாக புறக்கணிக்கப்படவேண்துவதில்லை என்கிறபோதிலும், ஒருவரை மணப்பதற்கு அது ஒரு முக்கிய காரணமாகி விடக்கூடாது. கலப்பினத்திருமணம் செய்த தம்பதிகள், வேறுபடுத்தப்படுதல் மற்றும் பரியாசங்களை சந்திக்க நேரிடும், அப்படிப்பட்டவைகளுக்கு வேதாகமத்தின்படி பதிலளிக்க அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (ரோமர் 10:12). ஒரு நிறக்குருடு சபை மற்றும் கிறிஸ்தவ கலப்பினத்திருமணமும் கிறிஸ்துவிலுள்ள சமத்துவத்திற்கு ஒரு வலிமையான உதாரணமாகும்.

English



முகப்பு பக்கம்

கலப்பினத்திருமணத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries