settings icon
share icon
கேள்வி

உலகளாவியம் / உலகளாவிய இரட்சிப்பு வேதாகமத்தின்படியானதா?

பதில்


உலகளாவியம் என்பது எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கையாகும். இன்று அநேகர் உலகளாவிய இரட்சிப்பை நம்புகிறார்கள், அதாவது எல்லோரும் கடைசியில் பரலோகத்திற்கு போவார்கள் என்று விசுவாசிக்கின்றனர். நரகத்தில் நித்தியமான உபத்திரவ வாழ்க்கையை அநேக ஆண்கள் மற்றும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைப்பதன் மூலம், வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள இது குறித்த போதனைகளை மறுக்கின்றனர். இன்னும் சிலருக்கு இது தேவனுடைய நீதியை மற்றும் நேர்மையை மறுத்து தேவனுடைய அன்பு மற்றும் கருசனையை முக்கியப்படுத்துவது ஆகும். இது தேவன் எல்லோர்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார் என்று விசுவாசிக்கும்படியாக அவர்களை நடத்துகிறது.

முதலாவது, இரட்சிக்கப்படாதவர்கள் அனைவரும் நித்திய நரகத்திலே தள்ளப்படுவார்கள் என்று வேதாகமம் தெளிவாக சொல்கிறது. இயேசு இதை தனது சொந்த வார்த்தைகளால் உறுதிபடுத்துகிறார், அதாவது இரட்சிக்கப்பட்டவர் தங்கள் நித்தியத்தை பரலோகத்தில் செலவிடுவார்கள் அதுபோலவே இரட்சிக்கப்படாதவர்களும் நித்தியத்தை நரகத்திலே செலவிடுவார்கள். மத்தேயு 25:46-ல், “அந்தபடியே இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்” என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தின்படி இரட்சிக்கப்படாதவர்களின் தண்டனை இரட்சிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை போலவே நித்தியமானது. சிலர் நரகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை கொஞ்ச கொஞ்சமாய் அழிந்து போகும் என்று விசுவாசிக்கின்றனர் ஆனால் அது நித்தியமானது என்று தேவனே அறிக்கையிடுகிறார். நரகமானது “நித்திய அக்கினி” மற்றும் “அவியாத அக்கினி” என்றும் மத்தேயு 25:41 மற்றும் மாற்கு 9:44 விளக்குகிறது.

ஒருவர் எப்படி அவியாத அக்கினியை தவிர்க்க முடியும்? எல்லா வழிகளும் - எல்லா மார்க்கங்களும் மற்றும் எல்லா விசுவாசமும் பரலோகத்திற்கே வழிநடத்துகின்றன என்று அநேகர் விசுவாசிக்கின்றனர் அல்லது தேவன் கிருபையும் அன்பும் நிறைந்தவர் ஆகவே அவர் அனைவரையும் பரலோகத்திற்கு செல்ல அனுமதிப்பார் என்று கருதுகின்றனர். தேவன் நிச்சயமாகவே அன்பும் கிருபையுமுள்ளவர் அந்த தன்மையே அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவை நமக்காக சிலுவையில் மரிக்கும்படிக்கு பூமிக்கு அனுப்பியது. இயேசுகிறிஸ்துவே நம்மை பரலோகத்திலுள்ள நித்தியத்திற்குள் வழிநடத்தும் தனிதன்மைவாய்ந்த வாசலாவார். அப்போஸ்தலர் 4:12 சொல்கிறது, “அவராலேயன்றி வேறோருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறோரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” “தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே, அவரே கிறிஸ்து” (1தீமோத்தேயு 2:5). யோவான் 14:6-ல் இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரன்”. யோவான் 3:16-ல் “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று வாசிக்கிறோம். தேவனுடைய குமாரனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் இரட்சிக்கப்படுவதற்கான தேவைகளை சந்திக்க தவறுகிறோம் (யோவான் 3:16, 18, 36).

உலகளாவியம் மற்றும் உலகளாவிய இரட்சிப்பு வேதாகமத்தின் அடிப்படையிலானவைகள் அல்ல என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. வேதவசனங்கள் போதிப்பதற்கு நேர் எதிராக உலகளாவியம் நேரடியாக இருக்கிறது. பிறர் கிறிஸ்தவர்கள் சகிப்புதன்மையற்று மற்றும் பிரத்தியேக ஜீவியத்தை குற்றப்படுத்தும் போது இந்த வார்த்தைகள் எல்லாம் கிறிஸ்துவின் வார்த்தைகள் என்பதை நாம் நினைவுகூறவேண்டியது அவசியமாகும். கிறிஸ்தவர்கள் தாங்களாகவே இந்த கருத்தை உருவாக்கவில்லை அவர்கள் கர்த்தர் ஏற்கனவே சொன்னதைத்தான் சொல்கிறார்கள். ஜனங்கள் இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் ஏனென்றால் அவர்களுடைய பாவங்களை அவர்களால் எதிர்கொள்ள விருப்பமில்லை மற்றும் அவர்களை இரட்சிக்க தேவன் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளவும் விருப்பமுமில்லை. தேவனுயை குமாரன் மூலம் இரட்சிக்கப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்தியிருப்பதை மறுதலிக்கிறது தேவனுடைய பரிசுத்தம் மற்றும் நீதியை சிறுமைப்படுத்துவதாகும் மற்றும் நமது சார்பாக இயேசு பலியானார் என்பதையும் மறுப்பதாகும்.

English



முகப்பு பக்கம்

உலகளாவியம் / உலகளாவிய இரட்சிப்பு வேதாகமத்தின்படியானதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries