settings icon
share icon
கேள்வி

இயேசு கிறிஸ்து யார்?

பதில்


தேவன் இருக்கிறாரா? என்கிற கேள்வியைப்போல் அல்லாமல், ஒரு சிலர் மட்டுமே இயேசு கிறிஸ்து ஜீவித்திருந்தாரா? என்று கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ரவேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் முழுமையான தனித்துவத்தைக் கூறும்போது தான் விவாதமே வருகிறது. உலகில் உள்ள எல்லா பெரிய மதங்களும் இயேசு கிறிஸ்துவை ஒரு பெரிய தீர்க்கதரிசி அல்லது ஒரு நல்ல போதகர் அல்லது ஒரு தேவ மனிதன் என்று போதிக்கின்றன. ஆனால் வேதாகமம் மட்டும்தான் அவரை தீர்க்கதரிசியிலும், நல்ல போதகரிலும் மற்றும் ஒரு தேவ மனிதன் என்பதிலும் மேலானவராக எடுத்துரைக்கிறது.

சி.எஸ்.லூயிஸ், “வெறும் கிறிஸ்தவம்” (Mere Christianity) என்கிற தமது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "இயேசுவைப் பற்றி மக்கள் எப்போதுமே சொல்லும் முட்டாள்தனமான காரியத்தை அப்படி யாரும் சொல்லக்கூடாது என இங்கே தடைபோட விரும்புகிறேன்: ‘இயேசுவை ஒரு பெரிய ஒழுக்கநெறி போதகராக ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இருக்கிறேன், ஆனால் அவர் தேவனாக இருப்பதாக கோருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை’. நாம் சொல்லக்கூடாத காரியம் இது ஒன்றுதான். ஒரு மனிதன் வெறும் மனிதனாக இயேசு சொன்ன காரியங்களை கூறினால், அவர் ஒரு பெரிய தார்மீக போதகராக இருப்பதில்லை. அவர் ஒரு பைத்தியக்காரத்தனமானவராக இருக்க வேண்டும், அதாவது அவர் ஒரு வேட்டையாடப்பட்ட முட்டை அல்லது அவர் நரகத்தில் இருக்கிற பிசாசாக இருப்பார். நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். இந்த மனிதன் தான், தேவனுடைய குமாரனாக இருந்தார் மற்றும் இருக்கிறார் அல்லது இந்த மனிதன் ஒரு பைத்தியக்காரனன் அல்லது மோசமானவன். அவரை முட்டாள் என கருதி வாயை அடைத்துபோடலாம், அவர்மேல் துப்பலாம், பிசாசு என்று கூறி கொலையும் பண்ணலாம் அல்லது நீங்கள் அவருடைய காலடியில் விழுந்து அவரை கர்த்தர் என்றும் தேவன் என்றும் அழைக்கலாம். ஆகையால், அவர் ஒரு போதகர் மட்டும்தான் எனக்கூறிக்கொண்டு முட்டாள்தனமா ஆதரவு அளிக்க முன்வரக்கூடாது. அவர் அந்த தெரிந்துகொள்ளுதலை நமக்கு அளிக்கவில்லை. அவர் அதை விரும்பவுமில்லை.

அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று உரிமை கோரினார்? வேதாகமம் அவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்று சொல்கிறது? முதலாவதாக நாம் இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” (யோவான் 10:30). சாதாரணமாக இதை பார்ப்பதற்கு, இயேசு தன்னைக் குறித்து தேவன் என்று சொன்னதாக இவ்வசனத்தில் தெரியாமல் போகலாம். ஆனால் இயேசு இப்படி சொன்னதும் அதற்கு யூதர்கள் எடுத்துக்கொண்ட விதம் மற்றும் யூதர்களின் பிரதிபலிப்பை கவனியுங்கள்: 'யூதர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக, நற்கிரியையினித்தமாக நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை - நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால், உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்" (யோவான் 10:33). இந்த வாக்கியத்தை இயேசு கிறிஸ்து கூறியது மூலம், தன்னை தேவனென்று குறிப்பிட்டதாக யூதர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இப்படி பிரதிபலித்ததால், இயேசு அதை மறுக்கவோ, மாறுத்தரம் சொல்லவோ இல்லை. இதிலிருந்து “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” என்று இயேசு கூறியது அவர் தேவனாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துவதற்குத்தான் என்பது தெளிவாகிறது. மற்றொரு உதாரணம் யோவான் 8:58, “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நானிருக்கிறேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார்". இங்கேயும் யூதர்கள் அவர் மேல் கல்லெறியம்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள் (யோவான் 8:59). இயேசு தன்னைக் குறித்து குறிப்பிடும் பொழுது, 'நான்" என்று குறிப்பிடுவதை பார்க்கலாம். அது பழைய ஏற்பாட்டில் தேவன் தன்னைக் குறித்து தமது நாமத்தை வெளிப்படுத்தியதிற்கு ஒப்பாயிருக்கிறது (யாத்திராகமம் 3:14). இயேசு கிறிஸ்து தேவன் என்று சொல்லாவிட்டால், யூதர்கள் அவர மேல் கல்லெறியும் படி ஏன் கற்களை எடுத்துக் கொள்ளவேண்டும்?

“அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்று யோவான் 1:1 சொல்லுகிறது. “அந்த வார்த்தை மாம்சமாகி” என்று யோவான் 1:14 குறிப்பிடுகிறது. இவைகள் இயேசு கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்த தேவன் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா “என் ஆண்டவரே, என் தேவனே” என்று அழைக்கிறார் (யோவான் 20:28). இயேசுகிறிஸ்து இங்கேயும் அதைத் திருத்தவில்லை மாறாக அதை ஏற்றுக்கொண்டவராகவே இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்து “மகாதேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று தீத்து 2:13ல் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய பேதுரு “நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று 2 பேதுரு 1:1ல் குறிப்பிடுகிறார். பிதாவாகிய தேவனும் இயேசுவின் தெய்வீகத்திற்கு சாட்சியாக இருக்கிறார். “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது” (சங்கீதம் 45:6; எபிரெயர் 1:8). பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை சூளுரைக்கிறது. “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” (ஏசாயா 9:6).

ஆகவேதான் இயேசு கிறிஸ்து வெறும் ஒரு நல்ல போதகர் மட்டும்தான் என்கிற கூற்றை சி.எஸ். லூயிஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

இயேசுகிறிஸ்து தெளிவாக தன்னை மறுக்க முடியாத அளவில் தேவனென்று அறிக்கையிடுகிறார். அவர் தேவனாக இல்லாமலிருப்பாரானால் அவர் வெறும் பொய்யராக இருப்பார். அதுமட்டுமன்றி அவர் தீர்க்கதரிசியிலும், போதகரிலும் இருந்து வேறுபடுகிறவராகவும் இருப்பார். நவீன காலத்து பண்டிதர்கள் இயேசு சொன்ன கூற்றில் இருந்து இயேசுகிறிஸ்துவை தேவனாக எடுத்துக்கொள்ள விருப்பமற்று, அவரை வரலாற்று மனிதராக அங்கிகரீக்கிற அவர்கள், அவர் உரைத்த காரியங்களை மாத்திரம் அவர் கூறியது அல்ல என மறுதலித்து வாதிடுகிறார்கள்.

வின் வாழ்க்கையை அபத்தமாக்கும்படியாக. உண்மையான வரலாற்று நாயகனான இயேசு சொன்னதாக வேதாகமம் சொல்கிற அநேக காரியங்களை சொல்லவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

இயேசு எந்த காரியங்களை கூறினார் அல்லது செய்தார் என்று வேதாகமம் கூறுகிற விஷயத்தில் அதற்கு எதிராக கேள்வி கேட்க நாம் யார்? இயேசுவோடு வசித்த, வாழ்ந்த, ஊழியம் செய்த சீஷர்களைக் காட்டிலும் (யோவான் 14:26) மேலாக இரண்டாயிரம் வருடத்திற்கு பின்பாக வந்த இந்த காலத்தில்லுள்ள பண்டிதர்களால் இயேசு கிறிஸ்து என்ன செய்தார் மற்றும் என்ன சொன்னார் என்கிற காரியங்களை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

இயேசுகிறிஸ்துவின் தனித்துவம் மற்றும் உண்மையான அடையாளங்களுக்கடுத்த கேள்வி ஏன் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது? இயேசுகிறிஸ்து தேவனா? இல்லையா? என்கிற காரியம் ஏன் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும்? ஏனென்றல் இயேசு கிறிஸ்து தேவனாக இல்லாமல் இருப்பாரேயானால், உலகத்தின் பாவத்திற்கான பரிகாரமாக அவர் சிந்திய இரத்தம் போதுமானதாக இருந்திருக்காது (1 யோவான் 2:2). தேவன் ஒருவர் மாத்திரமே ஒரு நித்திய பரிகாரத்தை செய்ய முடியும் (ரோமர் 5:8; 2 கொரி. 5:21). நமது பாவ கடன்களை தீர்க்க இயேசு கிறிஸ்து தேவனாக இருக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. மேலும் இயேசுகிறிஸ்து நம்முடைய பாவத்திற்காக மரிக்கவேண்டுமானால் அவர் மனிதனாக இருக்கவேண்டியதும் அவசியமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின்மேல் வைக்கிற விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நாம் இரட்சிக்கப்பட முடியும். இயேசு தெய்வீகத்தன்மையுள்ளவராக இருக்கிறார் என்கிற காரியமே அவர் ஒருவரே இரட்சிப்பின் வழியாக இருக்கிறார் என்பதற்கும் காரணமாக இருக்கிறது. இயேசு தெய்வீகத்தன்மையுள்ளவராக இருக்கிறபடியினால்தான், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று அவரால் பறைசாற்ற முடிந்தது.

English



முகப்பு பக்கம்

இயேசு கிறிஸ்து யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries