settings icon
share icon
கேள்வி

பூமியின் வயது என்ன? பூமி எவ்வளவு பழமையானது?

பதில்


சில தலைப்புகளில், வேதாகமம் பைபிள் மிகவும் தெளிவாக இருக்கிறது. உதாரணமாக, தேவன் மீது உள்ள ஒழுக்க நெறிகள் மற்றும் இரட்சிப்பின் முறை ஆகியவை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால், மற்ற தலைப்புகளில், வேதாகமத்தில் அதிகம் தகவல்கள் இல்லை. வேதாகமத்தை கவனமாக படிக்கும்போது, ஒரு தலைப்பானது மிகவும் முக்கியமானதாகக் கருதினால், அதை நேரடியாக வேதாகமம் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "முக்கிய காரியங்கள் யாவும் சாதாரண காரியங்கள்." வேதவாக்கியங்களில் வெளிப்படையாக குறிப்பிடப்படாத தலைப்புகளில் ஒன்று தான் பூமியின் வயது.

பூமியின் வயதை தீர்மானிக்க பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் சில அனுமானங்களை நம்பியிருப்பதால், இது துல்லியமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அனைத்து காரியங்களும் வேதாகம எழுத்தியல் (ஒரு வாசகத்தின் நேரடிப் பொருளை மாத்திரம் எடுத்துக் கொள்ளுதல்) மற்றும் விஞ்ஞான எழுத்தியல் ஆகியவற்றின் இடையேயுள்ள நிறமாலையில் விழுகிறதாக இருக்கிறது.

பூமியின் வயதை நிர்ணயிப்பதற்கான ஒரு முறை என்னவெனில், ஆதியாகமம் 1-ல் காணப்படுகின்ற ஆறு நாட்களின் எண்ணிக்கையாகும், அதாவது 24 மணிநேர காலங்கள் என்பதாகவும் ஆதியாகமத்தின் காலவரிசை அல்லது மரபுவழியில் எந்த இடைவெளிகளும் இல்லை என்றும் கருதுகிறது. ஆதியாகமத்தின் வம்ச அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆண்டுகள், சில பழைய ஏற்பாட்டு படைப்புக்கு தோராயமாக நேரம் கிடைக்கும்படி சேர்க்கப்படுகின்றன. இந்த முறையைப் பயன்படுத்தி, சுமார் 6,000 ஆண்டுகள் பூமியின் வயதில் வருகிறதை நாம் காண்கிறோம். வேதாகமம் வேறு எங்கும் வெளிப்படையாக பூமியின் வயதை எவ்விதத்திலும் குறிப்பிடுவது இல்லை என்பதை அறிந்துகொள்வதும் முக்கியம் - இது ஒரு கணக்கிடப்பட்ட எண் ஆகும்.

பூமியின் வயதை நிர்ணயிக்கும் மற்றொரு முறை என்னவெனில், ரேடியோமெட்ரிக் (கார்பன்) டேட்டிங் ஆகும், அதாவது புவியியல் சுழற்சிகள் போன்ற பல வளங்களைப் பயன்படுத்துவதேயாகும். வெவ்வேறு முறைகளை ஒப்பிட்டு, மற்றும் அவைகள் எந்த சீரமைப்பில் என்பதை பார்த்து, விஞ்ஞானிகள் கிரகத்தின் வயது எவ்வளவு என்று தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள், அப்படியே பூமியின் வயது 4 முதல் 5 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என முடிவுக்கு வருகின்றனர். பூமியின் வயது மற்றும் நேரத்தை நேரடியாக கணக்கிடுவதற்கு எந்தவிதமான சுலபமான வழியும் இல்லை என்பதை நாம் உணரவேண்டியது முக்கியம். இதுவும் ஒரு கணக்கிடப்பட்ட எண் ஆகும்.

பூமியின் வயதை நிர்ணயிக்கும் மேற்கண்ட இந்த இரண்டு முறைகளும் குறைபாடுகள் உள்ளதாக இருக்கின்றன. வேதாகம காலப்பகுதியை உருவாக்கிய நாட்கள் 24 மணிநேர கால நேரங்களாக இருக்க வேண்டும் என்று நம்பாத இறையியலாளர்கள் இருக்கிறார்கள். அவ்வாறே, ஆதியாகமத்தின் வம்சாவளிகள் வேண்டுமென்றே சில இடைவெளிகளைக் கொண்டுள்ளன என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. பூமியின் குறிக்கோள், 6,000 ஆண்டுகள் இளமையாக இருக்கிறது என்கிற அத்தகைய ஆதாரங்களை நிராகரிப்பது, தேவன் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒரு கால அளவோடு அல்லது வயதோடு சிருஷ்டித்ததாக "தோன்றுகிறது" என்ற காரணத்திற்காக, இப்படி எடுத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. இதற்கு முரணான கருத்துக்கள் இருந்தாலும், பழைய பூமிக்குரிய பார்வையைக் கொண்டிருக்கும் பல கிறிஸ்தவர்கள் வேதாகமம் தவறுகளில்லாத, தேவனால் உந்தப்பட்டு எழுதப்பட்டது என்பதை விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறார்கள், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வசனங்களின் சரியான விளக்கத்தை கொண்டுவரும் வியாக்கியானம் செய்யும்போது மட்டும் அவர்கள் வேறுபடுகிறார்கள்.

மறுபுறம், ரேடியோமெட்ரிக் டேட்டிங் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டுமே பயனுள்ளதாக அல்லது துல்லியமானதாக இருக்கிறது, இது பூமியுடன் தொடர்புபட்ட அளவைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே உள்ளது. புவியியல் நேரம் செதில்கள், புதைபடிவு பதிவுகள், போன்றவைகள் யாவும் முன்னுக்கு பின் கருத்து வேறுபாடுகள் மற்றும் மாடலிங் பிழைகள் உள்ளதாக இருக்கின்றன. மேலும் இதே காரியம் பெரிய பிரபஞ்சத்தின் அவதானிப்புகள் விஷயத்திலும் உண்மைதான்; நாம் காணும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு சிறிய பகுதியை மட்டுமே காணமுடியும், மேலும் "அறிவோம்" என்பது கோட்பாட்டு ரீதியான மறுக்கமுடியாத உண்மையாகும். சுருக்கமாக, பூமியின் வயதைக் குறித்த மதச்சார்பற்ற மதிப்பீடுகள் துல்லியமற்றவை என்று நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. விஞ்ஞான வினாக்களுக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானத்தை சார்ந்து இருப்பது நல்லது தான், ஆனால் விஞ்ஞானம் தவறிழக்காத முற்றிலும் சரியானது என்று கூற முடியாது.

இறுதியில், பூமியின் காலவரிசைப்படியான வயது நிரூபிக்கப்பட முடியாது. துரதிர்ஷ்டவசமாக, ஒரே சாத்தியமான விளக்கங்கள் – இறையியல் ரீதியாகவோ அல்லது விஞ்ஞான ரீதியாகவோ இருப்பதாகக் கூறும் காரியங்களில் பிரச்சினை இரு பக்கங்களிலும் உள்ளன என்று குரல்கள் ஒலிக்கின்றன. உண்மையில், கிறிஸ்தவத்திற்கும் பழைய பூமியிற்கும் இடையில் எந்தவிதமான சமரசமும் இல்லை. ஒரு இளம் பூமியில் உண்மையான அறிவியல் முரண்பாடும் இல்லை. யாவரும் தேவைப்படாத ஒரு பிரிவை உருவாக்கி வருகிறார்கள். ஒரு நபர் எந்த கண்ணோட்டத்தில் இருக்கிறாரோ அல்லது எடுத்துக்கொள்கிறாரோ, அவர் தேவனுடைய வார்த்தையில் உண்மையும் அதிகாரமுள்ளதாக இருக்கிறது என்பதை நம்புகிறாரா இல்லையா என்பதுதான் முக்கியம்.

Got Questions ஊழியங்கள் இளம் பூகோள முன்னோக்கை (young earth perspective) ஆதரிக்கின்றன. ஆதியாகமம் 1-2 அதிகாரங்கள் எழுத்தியல் பிரகாரமாக மற்றும் இளம் பூகோள சிருஷ்டிப்பு என்பவை பற்றிய ஒரு நேரடி வாசிப்பு அளிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அதே நேரத்தில், பூமியானது பூர்வமான பூகோளம் என்பதைப்பற்றியும் எங்களுக்கு பேதம் ஒன்றுமில்லை. பூமியின் வயதைப் பற்றி எங்களுடன் உடன்படாத கிறிஸ்துவிலுள்ள சகோதர சகோதரிகளின் விசுவாசத்தை நாங்கள் கேள்வி கேட்பது இல்லை. பழைய பூமி சிருஷ்டிப்பை பின்தொடர்ந்துகொண்டே, கிறிஸ்தவ விசுவாசத்தின் பிரதான கோட்பாடுகளை கடைப்பிடிக்கலாம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

வேதாகமத்தில் தெளிவாக விவரிக்கப்படாத பூமியின் வயதைப் போன்ற விஷயங்கள் உள்ளன என்பதினால்தான், அப்போஸ்தலனாகிய பவுல் வேதாகமத்தில் தெளிவாக விவரிக்கப்படாத காரியங்களுக்காக விவாதத்திற்கு உட்படக்கூடாது என்று கூறுகிறார் (ரோமர் 14: 1-10; தீத்து 3: 9). பூமியின் வயது வேதாகமத்தில் சாதாரண நிலையில் தெள்ளத்தெளிவாக இல்லை. பாவம், இரட்சிப்பு, அறநெறி, பரலோகம், அல்லது நரகத்தின் பார்வையைப்போன்று பூமியின் வயதைப் பற்றிய ஒரு பார்வை அவ்வளவு "முக்கியமானது" அல்ல, மேலும் இது அவசியமான தாக்கங்களையும் கொண்டிருக்கவில்லை. இதை உருவாக்கியவர் யார், அவர் எப்படி உருவாக்கிநார், நாம் அவரோடு எவ்வகையில் தொடர்புபடுத்துவது ஆகியவற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம், ஆனால் அவர் உருவாக்கியபோது, எப்பொழுது பூமியைப்படைத்தார் என்று தெளிவான, அதாவது நேரடிப் பொருள் கொள்ளும் வகையில் வேதாகமத்தில் குறிப்பிடவில்லை.

English



முகப்பு பக்கம்

பூமியின் வயது என்ன? பூமி எவ்வளவு பழமையானது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries