settings icon
share icon
கேள்வி

சமய மரபின் சொற்பொருள் விளக்கம் என்ன?

பதில்


சமய மரபு என்கிற வார்த்தையை ஜனங்கள் கேட்கும்போது, பெரும்பாலும் அவர்கள் ஞாபகத்திற்கு வருதெல்லாம் இவர்கள் சாத்தானை வழிபடும், விலங்குகளை பலியிடும், தீய, மாறுபாடான மற்றும் புறஜாதியரின் சமயச் சடங்குகளில் பங்கு பெறும் கூட்டத்தார்கள் என்பதாகும். நிஜத்தில் சமய மரபினர் அறிதாகவே இவைகளில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் சமய மரபு என்பது பரந்த அர்த்தத்தில் குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் பழக்கத்தை உடைய மத அமைப்பு என்பதாகும்.

வழக்கமாக, சமய மரபானது குறுகலான முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த வார்த்தை, எந்த உறுப்பினர்கள் அவர்களின் மதத்தின் பழைமையான கோட்பாடுகளை சிதைத்து ஒரு அடிப்படை உபதேசங்கள் அல்லாத ஒரு பிரிவை ஏற்படுத்துவதை குறிக்கிறது. வேதாகமத்தின் அடிப்படை உபதேசங்களை மறுக்கிற எந்த ஒரு மத அமைப்பும் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் சமய மரபு என வரையறுக்கப்படுகிறது. சமய மரபு என்பது இவர்களுடைய உபதேசத்தை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்படாதவர்களாகவே இருக்கச்செய்கிறது என்பதாகும். சமய மரபு ஒரு மதத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக உரிமைக் கோரினாலும் அது அந்த மதத்தின் அடிப்படை சத்தியங்களை மறுதலிக்கிறது. எனவே கிறிஸ்தவ சமய மரபானது கிறிஸ்தவம் என்று உரிமைக்கோரினாலும் அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களை மறுக்கிறதாக இருக்கிறது.

கிறிஸ்தவ சமய மரபின் இரண்டு பொதுவான போதனைகள் என்னவென்றால், இயேசு தேவன் அல்ல மற்றும் இரட்சிப்பு விசுவாசத்தினால் இல்லை என்பதே ஆகும். இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மறுப்பது, அவருடைய மரணம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக செலுத்தப்படுவதற்கு போதுமானதல்ல என்ற தீர்வை ஏற்படுத்துகிறது. விசுவாசத்தினால் இரட்சிப்பு என்பதை மறுப்பது, நம்முடைய சொந்த பிரயாசத்தினால்/முயற்சியினால் இரட்சிப்பை அடைவதை வழியுறுத்துகிறது. அப்போஸ்தலர்கள் சபையின் ஆரம்ப நாட்களில் சமய மரபுகளுக்கு விரோதமாக எழுதியுள்ளனர்: உதாரணமாக யோவான் ஞானமார்க்கத்தின் போதனைக்கு விரோதமாக எழுதியுள்ளார் (1 யோவான் 4:1-3). கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் (1 யோவான் 4:2) என்பதே யோவானின் இறை உபதேசத்திற்கான வேதியல் சோதனையாகும் (வசனம் 2) - இது ஞானமார்க்கத்தின் துர்உபதேசத்திற்கு மாறுபாடானதாகும் (2 யோவான் 7).

யெகோவாவின் சாட்சிகள் மற்றும் மோர்மன்கள் இந்த இரண்டுமே இன்று நன்கு அறியப்பட்ட கிறிஸ்தவ சமய மரபுக்களாகும் ஆகும். இந்த இரண்டுமே தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், இவர்கள் கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மற்றும் விசுவாசத்தினால் இரட்சிப்பு என்பதை மறுதலிக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் மற்றும் மோர்மன்கள் இருவருமே வேதாகமம் போதிக்கிற அநேக காரியங்களுக்கு ஒத்திருக்கின்றனர். எனினும் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை மற்றும் விசுவாசத்தினால்தான் இரட்சிப்பு என்பதை மறுதலிப்பது அவர்களை சமய மரபினைச் சேர்ந்தவர்களாக்குகிறது. யெகோவாவின் சாட்சிகள், மோர்மன் மற்றும் பிற சமய மரபுகளைப் பின்பற்றுகிற அநேகர் ஒழுக்கநெறியுள்ளவர்கள் மற்றும் தாங்கள் சத்தியத்தை கைகொள்கிறோம் என்கிற விசுவாசத்தையும் உடையவர்களாக இருக்கின்றார்கள். கிறிஸ்தவர்களாக இருக்கிற நம்முடைய நம்பிக்கையும் ஜெபமும் என்னவென்றால், சமய மரபினைப் பின்பற்றுகிற அநேகர் அவர்கள் தெத்துமாற்றின் வழியாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் தான் இரட்சிப்பு என்கிற சரியான உபதேசத்திற்கு இழுக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

English



முகப்பு பக்கம்

சமய மரபின் சொற்பொருள் விளக்கம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries