settings icon
share icon
கேள்வி

திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துக்கொள்வது / பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


தனிமையில் சந்தித்துக்கொள்வது (Courtship) மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது (Dating) என்கிற வார்த்தைகள் வேதாகமத்தில் இல்லை என்கிறபோதிலும், திருமணத்திற்கு முன்பே கிறிஸ்தவர்கள் செல்ல வேண்டிய சில பிரமாணங்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. முதலாவது, தேவனின் வழியிலிருந்து நாம் டேட்டிங் குறித்த உலகின் கண்ணோட்டத்தை பிரிக்கப்பட வேண்டும், காரணம் தேவனுடைய வழிகள் உலகத்திலிருந்து முரண்படுகிறது (2 பேதுரு 2:20). மற்றவர்களோடு சுற்றித்திரிய நாம் விரும்பும் அளவுக்கு உலகின் கண்ணோட்டம் அனுமதி அளிக்கிற தோற்றமளிக்கும் போது, முக்கியமான விஷயம், அவனுக்கு அல்லது அவளுக்கு எந்தவொரு உறுதிப்பாடும் செய்வதற்கு முன்பு ஒரு நபரின் குணாதிசயத்தைக் (தன்மையைக்) கண்டறிய வேண்டும். கிறிஸ்துவின் ஆவியில் அந்த நபர் மறுபடியும் பிறக்கப்பட்டிருப்பதை நாம் கண்டறியவேண்டும் (யோவான் 3: 3-8). கிறிஸ்துவுக்கு ஒப்பான அதே விருப்பத்தையும் சுபாவத்தையும் அவர் பெற்றிருக்கிறாரா எனவும் கண்டறியவேண்டும் (பிலிப்பியர் 2:5). டேட்டிங் அல்லது தனிப்பட்ட நிலையில் சந்தித்து பேசுதல் என்பதன் பிரதான இலக்கு ஒரு சரியான வாழ்க்கைத்துணையை கண்டுபிடிப்பதாகும். ஒரு கிறிஸ்தவன் என்கிற நிலையில் நாம் அவிசுவாசிகளை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது (2 கொரிந்தியர் 6:14-15), இது கிறிஸ்துவுடன் நமக்குள்ள உறவை பலவீனப்படுத்தி, நமது ஒழுக்க மற்றும் தரத்தை சமரசம் செய்கிறது.

ஒரு உறவில் பிணைக்கப்பட்டு இருக்கும்போது, டேட்டிங் அல்லது கோர்ட்டிங் செய்கிற விஷயத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனில் அன்பு கூறவேண்டும் என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும் (மத்தேயு 10:37). மற்றொருவர் "எல்லாமுமாக" இருக்கிறார் அல்லது ஒருவர் வாழ்வின் மிக முக்கியமானவராக இருக்கிற காரியமென்பது ஒரு விக்கிரக ஆராதனையாகும் மேலும் அது பாவமாகும் (கலாத்தியர் 5:20; கொலோசெயர் 3:5). மேலும், திருமணத்திற்கு முன்பாக பாலுறவு (உடலுறவு) செய்துகொள்வதன்மூலம் நம் உடல்களைத் தீட்டுப்படுத்தவே கூடாது (1 கொரிந்தியர் 6: 9, 13; 2 தீமோத்தேயு 2:22). பாலியல் ஒழுக்கக்கேடான பாவம் என்பது தேவனுக்கு எதிராக மட்டுமல்ல, நம்முடைய சொந்த உடல்களுக்கு எதிராகவும் நாம் செய்கிற பாவமாகும் (1 கொரிந்தியர் 6:18). நாம் நம்மை நேசிக்கிறதுபோல மற்றவர்களை நேசிக்கவும் மதிக்கவும் செய்வது முக்கியம் (ரோமர் 12: 9-10), இது ஒரு டேட்டிங் அல்லது கோர்ட்டிங் உறவுக்கு உண்மையாக இருக்கிறது. டேட்டிங் அல்லது கோர்ட்டிங் எதுவாக இருந்தாலும் இந்த வேதாகம பிரமாணங்களை பின்பற்றுவது தான் திருமணத்திற்கு பாதுகாப்பான அஸ்திபாரமுள்ள ஒரு சிறந்த வழியாகும். நாம் நம் வாழ்வில் எடுக்கிற ஒரு மிக முக்கியமான தீர்மானமாகும், காரணம் இருவரும் திருமணம் செய்துகொள்கையில், அவர்கள் ஒருவரோடு ஒருவர் பிணைந்து, தேவன் அவர்களை ஒரு நிரந்தரமான மற்றும் பிரிக்க முடியாததாக இருக்க வேண்டுமென்கிற ஒரு உறவில் ஒரே மாம்சமாக இணைக்கிறார் (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19: 5).

English



முகப்பு பக்கம்

திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துக்கொள்வது / பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries