settings icon
share icon
கேள்வி

தேவன் தீமையை சிருஷ்டித்தாரா?

பதில்


தேவன்தான் சகலத்தையும் சிருஷ்டித்தார் என்றால், தீமையையும் அவர்தான் சிருஷ்டித்திருக்க வேண்டும் என்பதுபோல எண்ணத் தோன்றும். தீமை என்பது பாறை, மின்சாரம் போன்ற ஒரு “பொருள்” கிடையாது. ஒரு குப்பி நிறைய தீமையை உங்களால் எடுக்க முடியாது. தீமைக்கு தன்னில்தானே தன்னிச்சையாக இருக்கும் தன்மை கிடையாது. நன்மையானது இல்லாதிருக்கும் நிலையில் தான் தீமையின் தோற்றம் அல்லது இருக்கும் தன்மை உண்டாகிறது. உதாரணமாக, துளைகள் என்பது நிஜம் ஆனால் அவைகள் வேறு ஏதோ ஒன்றின் இருக்கும் தன்மையை சார்ந்தே வருகிறது அல்லது இருக்கிறது. நாம் அழுக்கு இல்லாமல் இருப்பதை துளை என்கிறோம், ஆனால் அதை அழுக்கிலிருந்து பிரித்தெடுக்க முடியாது. ஆகவே தேவன் சிருஷ்டித்தபோது, அவர் சிருஷ்டித்த எல்லாமே நல்லதாகவே இருந்தது. தேவன் தேர்ந்தெடுத்துக்கொள்கிற உரிமையை அளித்து சிருஷடிப்பை சிருஷ்டித்தார். அந்த தெரிந்துக்கொள்கிற உரிமை உண்மையாக இருக்க அவர் நன்மையோடு வேறொரு காரியத்தையும் அனுமதித்தார். எனவே தேவன் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் நன்மையை தெரிந்துக்கொண்டு தீமையை வெறுத்துவிடுவதை அனுமதித்தார். இரண்டு நல்ல காரியங்களுக்கும் இடையே தவறான உறவு இருக்குமானால் அதை நாம் தீமை என்று சொல்கிறோம். அது தேவனால் உண்டாக்கப்பட்ட 'பொருள்' ஆகிவிடுவதில்லை.

ஒருவேளை இன்னும் கூடுதல் விளக்கம் கொடுத்தால் புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு நபரிடம் 'குளிர் இருக்கிறதா? என்று கேட்கும்பொழுது அதற்கு பதில் 'ஆம்' என்றே இருக்கும். ஆனால் அது தவறு. குளிர் என்பது இருக்கவில்லை. குளிர் என்பது வெப்பம் இல்லாமையினால் வந்ததாகும். அதுபோலவே இருள் என்பது இல்லை. அது ஒளியின்மையினால் வந்ததாகும். தீமை என்பது நன்மை இல்லாதிருப்பது அல்லது தீமை என்பது தேவனில்லாதிருப்பது. தேவன் தீமையை உண்டாக்க வேண்டியிருக்கவில்லை. ஆனால் நன்மை இல்லாதிருப்பதை அனுமதிக்க வேண்டியிருந்தது.

தேவன் தீமையை சிருஷ்டிக்கவில்லை, ஆனால் நன்மையில்லாமல் இருக்கும்போது தீமை வரத்தக்கதாக அவர் தீமையை அனுமதித்திருந்தார். ஒரு வேளை தேவன் தீமையை அனுமதிக்காமல் இருந்திருந்தால் தேவதூதர்களும் மனிதர்களும் தேவனை கட்டாயத்தின்பேரில்தான் சேவித்திருப்பார்களேயன்றி அவர்களுடைய தெரிந்துகொள்ளுதலின்படி சேவை செய்யாதிருக்க மாட்டார்கள். தேவன் அவர்களை “இயந்திர மனிதர்களைப்போல” தாம் ஏற்கனவே திட்டமிட்ட காரியங்களை மட்டும் செய்கிறவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று விரும்பவில்லை. தேவன் நாம் உண்மையாகவே நம்முடைய சுயசித்தத்தை உபயோகப்படுத்தி அவருக்கு சேவை செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என தெரிந்து கொள்வதற்காகத்தான் தீமையை அனுமதித்தார்.

வரையறைக்குட்பட்ட மனிதர்களாகிய நாம் வரையறைக்கு அப்பாற்பட்ட எல்லையில்லாத தேவனை நம்மால் முழுவதும் புரிந்து கொள்ள முடியாது (ரோமர் 11:33-34). சில நேரங்களில் நாம் தேவன் ஏன் ஒரு காரியத்தைச் செய்தாரென்று புரிந்துகொண்டதாக நினைக்கிறோம். ஆனால் பின்புதான் அது அவ்வாறாக இல்லை வேறு எண்ணத்துடன் தேவன் அதை செய்திருக்கிறாரென்று புரியும். தேவன் காரியங்களை பரிசுத்தம், நித்தியம் என்ற பார்வையில் தான் பார்க்கிறார். நாமோ பாவத்திலிருந்து உலகப்பிரகாரமான நம்முடைய பார்வையில் பார்க்கிறோம்.

ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து அதனிமித்தம் தீமை, மரணம் மற்றும் வேதனைகள் எல்லா மனுகுலத்தின் மீது வரும் என்று அறிந்தும் ஏன் தேவன் மனிதனை பூமியில் வைக்க வேண்டும்? ஏன் தேவன் நம்மை பரிபூரணமுள்ளவர்களாக சிருஷ்டித்து வேதனை இல்லாத இடமாகிய பரலோகத்திலேயே நம்மை வைத்திருக்கக்கூடாது? இந்தக் கேள்விகளுக்கு நித்தியத்திற்கு இப்புறமான இந்நிலையில் இருந்து போதுமான விதத்தில் பதில் கிடைக்காது. நாம் என்ன புரிந்து கொள்ளலாம் என்றால், தேவன் செய்கிற எல்லா காரியங்களும் பரிசுத்தமும், பரிபூரணமும் மற்றும் அவரை மகிமைப்படுத்துகிறதாயும் இருக்கும். தேவன் தீமையை அனுமதித்ததன் நோக்கமே நமக்கு அவரை ஆராதிக்க உண்மையான சுயசித்தத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகதான். தேவன் தீமையை உண்டாக்கவில்லை, ஆனால் அனுமதித்தார் அவர் அனுமதித்திராவிட்டால் நாம் அவரை சுயசித்தத்தின்படி ஆராதிக்காமல் கட்டாயத்தின்பேரில்தான் ஆராதித்துக்கொண்டிருந்திருப்போம்.

English



முகப்பு பக்கம்

தேவன் தீமையை சிருஷ்டித்தாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries