settings icon
share icon
கேள்வி

நான் எனது திருமணத்திற்கு எப்படி ஆயத்தமாக முடியும்?

பதில்


வாழ்கையில் எந்த ஒரு முயற்சி எடுக்கும் முன் நாம் ஆயத்தப்படுவது போலவேதான் திருமணத்திற்காகவும் நாம் வேதாகம முறைப்படி ஆயத்தப்பட வேண்டியது அவசியம். மறுபடியும் பிறந்த விசுவாசிகள் என்கிற பிரமாணம் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஆட்கொண்டு நடத்தவேண்டும்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:37). இது ஒரு சாதாரணமான கட்டளை அல்ல. எல்லா விசுவாசிகளுடைய வாழ்கையிலும் இது மத்திய பாகத்தில் இருக்கிற மிக முக்கியமான ஒன்றாகும். நாம் முழு உள்ளத்தோடு தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் கவனம் செலுத்தி, அவரை பிரியப்படுத்தும் காரியங்களால் நம் ஆத்துமாவையும் மனதையும் நிறைக்கும்படி கவனம் செலுத்துவதை தெரிந்தெடுக்க வேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு தேவனுடன் இருக்கும் உறவு தான் மற்ற எல்லா உறவுகளையும் ஒரு சரியான முன்னோக்குவில் அமையப்பண்ணுகிறது. திருமண உறவின் மாதிரி கிறிஸ்து மற்றும் சபையின் உறவினை அடிப்படையாகக் கொண்டுள்ளது (எபேசியர் 5:22-33). விசுவாசிகளான நம் வாழ்கையின் எல்லா அம்சங்களும் தேவனுடைய கற்பனைகள் மற்றும் அவரது கட்டளைகளின்படி வாழ நம்மை அர்ப்பணிப்பதன் அடிப்படையில் தான் உள்ளது. நாம் தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் கீழ்ப்படிவது, திருமண வாழ்வில் தேவன் நமக்கு தந்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்றும்படி நம்மை சீர்ப்பொருந்த செய்கிறது. மறுபடியும் பிறந்த ஒவ்வொரு விசுவாசியும் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலேயும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் (1 கொரிந்தியர் 10:31).

நீங்கள் திருமணத்திற்கு உங்களை ஆயத்தம் பண்ணுவதற்கு, இயேசு கிறிஸ்துவின் அழைபிற்கு பாத்திரவான்களாக நடக்கவும், தேவ வார்த்தையின் மூலம் அவரோடு நெருங்கிய ஐக்கியம் கொள்ளவும் (2 தீமோத்தேயு 3:16-17), எல்லாவற்றிலேயும் அவருக்கு கீழ்ப்படிகிற காரியங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தேவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க சுலபமான திட்டம் வேறு ஒன்றுமில்லை. ஒவ்வொரு நாளும் நாம் உலக கண்ணோட்டங்களை அகற்றிவிட்டு, தேவனுக்கு கீழ்ப்படிய தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்து நம்மை அழைத்த அழைப்பிற்கு பாத்திரமாக நடக்கவேண்டுமானால், ஒரே வழியும், ஒரே சத்தியமும், ஒரே ஜீவனுமாகிய அவருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் தாழ்மையோடு நம்மை அர்ப்பணிக்கவேண்டும். இதுவே எல்லா விசுவாசிகளும் மாபெரும் ஈவாகிய திருமணத்திற்கு செய்ய வேண்டிய மிகமுக்கியமான ஆயத்தமாகும்.

ஆவிக்குரிய வாழ்கையில் முதிர்ச்சியடைந்து மற்றும் தேவனோடு நடக்கக்கூடிய ஒரு நபர்தான் மற்ற எல்லாரையும் விட அதிகமாக திருமணத்திற்க்கு ஆயத்தமாகப்பட்டவர் ஆகும். திருமண வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, உற்சாகம், தாழ்மை, அன்பு, மற்றும் மரியாதை மிகவும் அவசியம். தேவனோடு நெருங்கிய உறவில் இருப்பவர்களிடம் இவைகளெல்லாம் வெளிப்படும். நீங்கள் திருமணத்திற்கு ஆயத்தமாகும்போது, தேவன் விரும்பும் மனிதனாக அல்லது பெண்ணாக உங்களை தேவன் உருவாக்கும்படி அதில் கவனம் செலுத்துங்கள் (ரோமர் 12:1-2). நீங்கள் அவருக்கு உங்களை அர்ப்பணித்தால், அந்த ஆச்சரியமான நாள் நெருங்கும்போது அவர் உங்களை திருமணத்திற்கென்று ஆயத்தமாக உதவி செய்வார்.

English



முகப்பு பக்கம்

நான் எனது திருமணத்திற்கு எப்படி ஆயத்தமாக முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries