settings icon
share icon
கேள்வி

ஏழு கொடிய பாவங்கள் யாவை?

பதில்


கத்தோலிக்க இறையியலின்படி, ஏழு கொடூரமான பாவங்கள் என்பது தடுக்கப்படாத நிலைக்கு விடப்பட்டுள்ள ஏழு தீமைகள் அல்லது எதிர்மறையான தன்மையைக்கொண்ட குணங்கள் உள்ளதை குறிக்கிறது. இது மற்ற பாவங்களையும் தோற்றுவித்து அதன் விளைவாக இறுதியில் ஒரு நபரின் ஆத்மாவையே கொன்றுவிடும் என்பதாகும். ஏழு "கொடிய” பாவங்களாவன பெருமை, பொறாமை, பெருந்தீனி, காமம், கோபம், பேராசை, மற்றும் சோம்பேறித்தனம். இந்த பட்டியல் ஆறாவது நூற்றாண்டில் போப் கிரிகோரி த கிரேட் என்பவரால் முதன்முதலில் வரையறுக்கப்பட்டது. தாமஸ் அக்யூனாஸ் என்பவர் பின்னர் இந்த யோசனை விளக்கினார். பதினான்காம் நூற்றாண்டில், டாண்டே என்னும் கவிஞர் தனது காவிய கவிதையாகிய இன்ஃபெர்னோவை எழுதினார், அதில் அவர் ஏழு மாடியைக் கொண்ட ஏழு கொடிய பாவங்களைக் கொண்டிருக்கும் உத்தரிக்கும் ஸ்தலத்தை சித்திரமாக்கினார்.

ஏழு கொடிய பாவங்கள் ஏழு மூலதன பாவங்கள் அல்லது ஏழு கார்டினல் பாவங்கள் என்று அழைக்கப்படுகின்றன – கார்டினல் என்பது இந்த சூழலில், "அடிப்படை முக்கியத்துவம்" அல்லது "படுமோசமான கல்லறை" என்று அர்த்தப்படுகிறது. ஏழு கொடூரமான பாவங்கள் மனிதனை வாதிக்கும் மற்றும் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் பாவங்கள் ஆகும். ஏழு கொடிய பாவங்கள் ஒவ்வொன்றும் மற்ற பாவங்களுக்கு வழிநடத்துகின்றன; உதாரணமாக, கோபம் தீய பேச்சு, வன்முறை அல்லது கொலைக்கு வழிவகுக்கும்.

இங்கே ஏழு கொடிய பாவங்கள் ஒவ்வொன்றையும் குறித்து சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது:

பெருமை - ஒரு பெருகிய, நம்பத்தகாத உணர்வுள்ள உங்களின் சுய மதிப்பு.

பொறாமை – நீங்கள் தான் அதை பெற்றிருக்க அல்லது அடைந்திருக்கவேண்டும் என்கிறதான உணர்வாகும், அதாவது வெற்றி, நல்லொழுக்கம், அல்லது மற்றொரு நபரின் திறமைகள் ஆகியவற்றின் தகுதி கள்.

பெருந்தீனி - சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் கொண்டிருக்கிற ஒரு மிகுந்த ஆசை.

இச்சை / காமம் - உங்கள் மனைவியை அல்லது கணவனையல்லாது வேறொருவருடன் பாலியல் இன்பத்தை அடைய சுயநலமான கவனத்தோடு கொண்டுள்ள விருப்பம்.

கோபம் – துல்லியமான நிலையில் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று துடிக்கும் மிகுந்த நிலையிலுள்ள ஒரு தவறான விருப்பம்.

பேராசை – உடைமைகளுக்கான ஒரு அதீத அளவற்ற ஆசை, குறிப்பாக மற்றொருவருக்கு சொந்தமான உடைமைகளுக்கு.

சோம்பேறித்தனம் – தேவையான மற்றும் செய்யவேண்டிய பணியை செய்யாமல் அதிலே அதிகப்படியான முயற்சியின் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு அதைச் செயலிழக்கவும் செய்வது (அல்லது மோசமாக செய்வது).

ஏழு கொடிய பாவங்களைப் பற்றிய ஒரு பொதுவான தவறான கருத்து என்னவெனில், அவைகள் தேவனால் மன்னிக்கப்பட முடியாத பாவங்கள் என்பதாகும். ரோமன் கத்தோலிக்க திருச்சபை பாவங்களை மன்னிக்க இயலாது என்று போதிக்கவில்லை; கத்தோலிக்க கோட்பாட்டில், ஏழு கொடிய பாவங்கள் மரண பாவங்களுக்கு வழிவகுக்கலாம், இவைகள் மரணத்திற்கு பிறகு உடனடியாக நரகத்திற்கு அந்த நபரை அனுப்பிவிடும், ஆக அதற்கு முன்பாக மனந்திரும்பி பாவங்களிலிருந்து மன்னிப்பை பெறவேண்டும் என்பதாகும். மேலும், ஏழு நல்லொழுக்கங்கள் (மனத்தாழ்மை, நன்றியுணர்வு, தொண்டு, மனோபாவம், கற்பு, பொறுமை, மற்றும் விடாமுயற்சி) மூலமாக ஏழு கொடிய பாவங்களை வெற்றிக்கொள்ள முடியும் என்று கத்தோலிக்கம் கற்பிக்கிறது.

ஏழு கொடிய பாவங்களைப் பற்றிய சிந்தை வேதாகமத்தின்படியானதா? ஆமாம் மற்றும் இல்லை. நீதிமொழிகள் 6:16-19 தேவன் வெறுக்கிற ஏழு காரியங்களை பட்டியலிடுகிறது: 1) மேட்டிமையான கண்கள், 2) பொய்நாவு, 3) குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கைகள், 4) துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், 5) தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்கள், 6) அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, மற்றும் 7) சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல். நிச்சயமாக, இந்த பட்டியலிலுள்ள ஏழு காரியங்களை "ஏழு கொடியபாவங்கள்" என பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்வதில்லை.

ஆம், பெருமை, பொறாமை, முதலியன, வேதாகமம் கண்டனம் செய்யும் பாவங்களாக இருக்கின்றன; எனினும், அவைகள் "ஏழு கொடிய பாவங்கள்" என வேதாகமம் அழைக்கவில்லை. ஏழு கொடூரமான பாவங்களின் மரபுவழி பட்டியல் பலவிதமான பாவங்களை வகைப்படுத்த ஒரு வழியாக செயல்பட முடியும். இந்த ஏழு பிரிவுகளில் ஒன்றின்கீழ் ஏறக்குறைய எல்லா பாவமும் வகைப்படுத்தப்படலாம்.

இறுதி ஆய்வில், எந்த பாவமும் மற்ற பாவத்தை விட "கொடியதாக" இல்லை. எல்லா பாவங்களும் மரணத்திற்கு வழிவகுக்கிறது (ரோமர் 6:23). எல்லா பாவமும் ஒருவரை நியாயப்பிரமாணத்தை மீறியதாக கண்டனம் செய்கிறது (யாக்கோபு 2:10). தேவனுக்கே துதி உண்டாகட்டும், "ஏழு கொடியபாவங்கள்" உட்பட நம்முடைய அனைத்து பாவங்களுக்காகவும் இயேசு கிறிஸ்து நம்முடைய தண்டனையை எடுத்துக்கொண்டார். தேவனுடைய கிருபையினால், கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தின் மூலம் நாம் மன்னிக்கப்படுகிறோம் (மத்தேயு 26:28; அப்போஸ்தலர் 10:43; எபேசியர் 1:7).

English



முகப்பு பக்கம்

ஏழு கொடிய பாவங்கள் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries