settings icon
share icon
கேள்வி

மகா உபத்திரவம் என்றால் என்ன?

பதில்


உபத்திரவம் என்பது கர்த்தர் தமது திட்டத்தின் குறைந்தபட்சம் இரண்டு அம்சங்களை நிறைவேற்றும் இனி வருகிற ஒரு காலமாகும்: 1) அவர் இஸ்ரவேல் தேசத்தின் மீதுள்ள தமது ஒழுக்க நடவடிக்கையை நிறைவு செய்வார் (தானியேல் 9:24), மற்றும் 2) அவர் பூமியிலுள்ள அவிசுவாசிகள், தேவனையற்றவர்களை நியாயந்தீர்ப்பார் (வெளிப்படுத்துதல் 6-18). உபத்திரவத்தின் காலஅளவு ஏழு ஆண்டுகள். தானியேலின் எழுபது வாரங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் இது தீர்மானிக்கப்படுகிறது (தானியேல் 9:24-27; உபத்திரவம் பற்றிய கட்டுரையையும் பார்க்கவும்). மகா உபத்திரவம் என்பது உபத்திரவ காலத்தின் கடைசி பாதியாகும், அதாவது மூன்றரை ஆண்டு காலம். இது உபத்திரவ காலத்திலிருந்து வேறுபடுகிறது, ஏனென்றால் மிருகம் அல்லது அந்திக்கிறிஸ்து வெளிப்படும், மேலும் இந்த காலத்தில் தேவனுடைய கோபம் பெரிதும் அதிகரிக்கும். எனவே, உபத்திரவம் மற்றும் மகா உபத்திரவம் ஆகியவை ஒத்த சொற்கள் அல்ல என்பதை இந்த இடத்தில் வலியுறுத்த வேண்டியது அவசியம். எதிர்கால சாஸ்திரத்திற்க்குள் (எதிர்கால விஷயங்களைப் பற்றிய ஆய்வு), உபத்திரவம் என்பது முழு ஏழு வருட காலத்தைக் குறிக்கிறது, அதே நேரத்தில் "மகா உபத்திரவம்" என்பது அந்த உபத்திரவ காலத்தின் கடைசி அதாவது இரண்டாம் பாதியைக் குறிக்கிறது.

உபத்திரவ காலத்தின் கடைசி பாதியைக் குறிப்பிடும்போது கிறிஸ்துவே "மகா உபத்திரவம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். மத்தேயு 24:21 இல், இயேசு சொல்கிறார், "உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்." இந்த வசனத்தில் இயேசு மத்தேயு 24:15 இன் நிகழ்வைக் குறிப்பிடுகிறார், இது பாழாக்கும் அருவருப்பை வெளிப்படுத்துவதை விவரிக்கிறது, அந்த மனிதன் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். மேலும், மத்தேயு 24:29-30 இல் இயேசு கூறுகிறார், "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." இந்த வேதப்பகுதியில், இயேசு மகா உபத்திரவம் (v.21) பாழாக்கும் அருவருப்பை வெளிப்படுத்துவதில் தொடங்கி (v.15) மற்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையுடன் முடிவடைகிறது (v.30) என்று வரையறுக்கிறார்.

மகா உபத்திரவத்தைக் குறிப்பிடும் பிற பகுதிகள் தானியேல் 12:1, "யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்" என்று கூறுகிறது. மத்தேயு 24:21 இல் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகளை இயேசு பேசும்போது இந்த வசனத்தை மேற்கோள் காட்டியதாக தெரிகிறது. மேலும் மகா உபத்திரவத்தைக் குறிப்பிடுவது எரேமியா 30:7, "ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்." "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்ற சொற்றொடர் இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது, இது இதுவரை கண்டிராத உபத்திரவம் மற்றும் இயற்கை பேரழிவுகளை அனுபவிக்கும்.

மத்தேயு 24:15-30 -ல் கிறிஸ்து நமக்குத் தந்த தகவலைக் கருத்தில் கொண்டு, மகா உபத்திரவத்தின் ஆரம்பம் அந்திக்கிறிஸ்துவின் செயலான பாழாக்கும் அருவருப்புடன் அதிகம் தொடர்புடையது என்று முடிவு செய்வது எளிது. தானியேல் 9:26-27 இல், இந்த மனிதன் ஏழு வருடங்களுக்கு உலகத்துடன் ஒரு "உடன்படிக்கை" (ஒரு சமாதான ஒப்பந்தம்) செய்வதை நாம் காண்கிறோம் (ஒரு "வாரம்"; மீண்டும், உபத்திரவம் பற்றிய கட்டுரையைப் பார்க்கவும்). ஏழு வருட காலத்தின் பாதியிலேயே--"வாரத்தின் பாதியில்"—இந்த மனிதன் தான் செய்த உடன்படிக்கையை மீறுவான், பலி மற்றும் போஜனபலியை நிறுத்துவான், இது எதிர்காலத்தில் புனரமைக்கப்பட்ட தேவாலயத்தில் அவனது செயல்களைக் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் 13:1-10 மிருகத்தின் செயல்களைப் பற்றி இன்னும் விரிவாகக் கூறுகிறது, மேலும் முக்கியமானது, அது அவன் அதிகாரத்தில் இருக்கும் காலத்தின் நீளத்தையும் குறிப்பிடுகிறது. வெளிப்படுத்துதல் 13:5 இல் அவன் 42 மாதங்கள் ஆட்சியில் இருப்பான் என்கிறது, அதாவது மூன்றரை வருடங்கள், மகா உபத்திரவத்தின் நீளம்.

மகா உபத்திரவம் பற்றிய பெரும்பாலான தகவல்களை வெளிப்படுத்தின விசேஷம் நமக்கு வழங்குகிறது. வெளிப்படுத்தல் 13 முதல் மிருகம் வெளிப்படும் போது, வெளிப்படுத்துதல் 19 இல் கிறிஸ்து திரும்பும் வரை, அவிசுவாசம் மற்றும் கலகம் காரணமாக பூமியில் தேவனுடைய கோபத்தின் சித்திரம் நமக்கு வழங்கப்படுகிறது (வெளிப்பாடு 16-18). இது தேவன் எவ்வாறு ஒழுங்குபடுத்துகிறார் மற்றும் அதே நேரத்தில் தனது மக்களான இஸ்ரவேலருக்கு (வெளிப்படுத்துதல் 14:1-5) ஒரு பூமிக்குரிய ராஜ்யத்தை நிறுவுவதன் மூலம் இஸ்ரவேலுக்கு அவர் அளித்த வாக்குத்தத்தைக் காப்பாற்றும் வரை ஒரு சித்திரம் (வெளிப்படுத்துதல் 20:4-6).

English



முகப்பு பக்கம்

மகா உபத்திரவம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries