settings icon
share icon
கேள்வி

ஷின்டோயிசம் என்றால் என்ன?

பதில்


ஷின்டோயிசம் என்பது முற்றிலும் ஒரு ஜப்பானிய மதம், இதன் தோற்றம் பண்டைய ஜப்பானிய வரலாற்றில் காணப்படுகிறது. இது உலகின் பழமையான மதங்களில் ஒன்றாகும். ஜப்பானிய மக்கள் தங்கள் தேசத்தின் மீது கடுமையான அன்பைக் கொண்டுள்ளனர் மற்றும் ஜப்பானிய தீவுகள் முதல் தெய்வீக படைப்பு என்றும் நம்புகிறார்கள். உண்மையில், ஷின்டோயிசம் வேறு எந்த தேசமும் தெய்வீகமானது அல்ல என்று போதிக்கிறது, இதுவே ஜப்பானை உலகில் தனித்துவமாக்குகிறது. ஆகவே, ஜப்பானுக்கு வெளியே ஷின்டோயிசம் பிரபலமாகாததில் ஆச்சரியமில்லை.

இரண்டு அடிப்படை ஷின்டோ கோட்பாடுகள் உள்ளன. ஜப்பான் கடவுள்களின் நாடு மற்றும் அதன் மக்கள் கடவுள்களின் வழித்தோன்றல்கள் என்பதாகும். ஜப்பானிய மக்களின் தெய்வீக வம்சாவளியைப் பற்றிய இந்த கருத்து, அதே போல் தேசத்தின் தெய்வீக தோற்றம், மற்ற நாடுகள் மற்றும் மக்களை விட மேன்மைக்கான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஷின்டோவின் சில நியமிக்கப்பட்ட பிரிவுகளைத் தவிர, இந்த மதத்திற்கு குறிப்பிட்ட நிறுவனர், புனித எழுத்துக்கள் அல்லது அதிகாரபூர்வமான நம்பிக்கைகள் என்று எதுவும் இல்லை. ஜப்பான் நாட்டில் உள்ள ஏராளமான புனித ஸ்தலங்களில் ஒன்றில் வழிபாடு நடைபெறுகிறது, இருப்பினும் பல ஜப்பானியர்கள் தங்கள் வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஏராளமான தெய்வங்களுக்கு பலிபீடங்களைக் கொண்டுள்ளனர்.

ஷின்டோ என்ற வார்த்தை சீன வார்த்தையான ஷென்-தாவோவிலிருந்து வந்தது, அதாவது "தேவனுடைய வழி". ஷின்டோவின் முக்கிய அம்சம் காமியின் கருத்து, உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களில் உள்ள புனித சக்தியின் கருத்து. இயற்கையில் கடவுள்கள் மற்றும் ஆவிகள் இருப்பதைப் பற்றிய சக்திவாய்ந்த உணர்வு ஷின்டோவில் உள்ளது. ஷிண்டோவின் கடவுள்கள் ஒரு படிநிலையில் தொகுக்கப்படுவதற்கு ஏராளமானவர்கள், ஆனால் சூரிய தெய்வம் அமேடெராசு மிகவும் மதிக்கப்படுகிறார், மேலும் அவரது பிரமாண்டமான ஏகாதிபத்திய கோயில் டோக்கியோவிலிருந்து தென்மேற்கே 200 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ஜப்பானிய மக்கள் தாங்களே காமியிலிருந்து வந்தவர்கள் என்று ஷின்டோ கற்பிக்கிறது.

ஷின்டோ மதம் வேதாகம கிறிஸ்தவத்துடன் முற்றிலும் பொருந்தாது. முதலாவதாக, ஜப்பானிய ஜனங்களும் அவர்களுடைய தேசமும் மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக விரும்பப்படுகின்றன என்ற கருத்து, யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் என்ற வேதாகமத்தின் போதனைக்கு முரணானது: “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபாகமம் 7:6). இருப்பினும், யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாக இருந்தாலும், அவர்கள் வேறு எந்த ஜனங்களையும் விட சிறந்தவர்களாக ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை, மேலும் அவர்கள் நேரடியாக தேவனிடமிருந்து வந்தவர்கள் என்று வேதாகமம் கற்பிக்கவில்லை.

இரண்டாவதாக, பல கடவுள்கள் இல்லை, ஆனால் ஒரே தேவன் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது: "நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை" (ஏசாயா 45:5). தேவன் ஒரு ஆளுமையற்ற சக்தி அல்ல, ஆனால் அவருக்குப் பயப்படுபவர்களுக்கு அன்பான மற்றும் அக்கறையுள்ள பிதா என்று வேதாகமம் கற்பிக்கிறது (2 கொரிந்தியர் 6:17-18). அவர் மட்டுமே இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார், அவர் மட்டுமே அதன் மீது இறையாண்மையுடன் ஆட்சி செய்கிறார். பாறைகள், மரங்கள் மற்றும் விலங்குகளில் வசிக்கும் கடவுள்களின் கருத்து இரண்டு வெவ்வேறு பொய்களை ஒருங்கிணைக்கிறது: பல தெய்வ நம்பிக்கை (பல கடவுள்களின் மேலுள்ள நம்பிக்கை) மற்றும் அனிமிசம் (கடவுள்கள் பொருட்களில் இருப்பதாக நம்பிக்கை). பொய்களின் பிதாவான சாத்தானின் பொய்கள் இவை, "கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரை விழுங்கலாமோ என்று வகைத்தேடி சுற்றித் திரிகிறான்" (1 பேதுரு 5:8).

மூன்றாவதாக, ஷின்டோயிசம் ஜப்பானிய மக்களில் பெருமை மற்றும் மேன்மை உணர்வுகளை வளர்க்கிறது; இத்தகைய உயரடுக்கு வேதாகமத்தில் கண்டிக்கப்படுகிறது. தேவன் பெருமையை வெறுக்கிறார், ஏனென்றால் அது ஜனங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுவதைத் தடுக்கிறது (சங்கீதம் 10:4). கூடுதலாக, ஜப்பானிய மக்களின் அடிப்படை நன்மை மற்றும் தெய்வீக தோற்றம் பற்றிய போதனைகள் ஒரு இரட்சகருக்கான அவர்களின் தேவையைத் தடுக்கின்றன. ஒருவரின் இனம் தெய்வீக தோற்றம் கொண்டதாக கருதுவதன் இயற்கையான விளைவு இதுவாகும். “எல்லோரும் பாவஞ்செய்து, தேவனுடைய மகிமையை இழந்தவர்களாகிவிட்டார்கள்” (ரோமர் 3:23) என்று வேதாகமம் சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது, நம் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரு இரட்சகர் தேவை என்றும், “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12) அறிந்துகொள்ள வேண்டும்.

சடங்கு சுத்திகரிப்பு மூலம் தங்களை தகுதியுடையவர்களாக ஆக்கியவர்களுடன் காமி தொடர்பு கொள்ளலாம் என்று ஷின்டோ கற்பிக்கும் அதே வேளையில், வேதாகமத்தின் தேவன் மன்னிப்புக்காக அவரை அழைக்கும் எவருக்கும் இருப்பதாக உறுதியளிக்கிறார். எந்தவொரு தனிப்பட்ட சுத்திகரிப்பும் (செயல்களால்/கிரியைகளால் இரட்சிப்பின் ஒரு வடிவம்) ஒரு நபரை தேவனுடைய பிரசன்னத்திற்கு தகுதியானதாக மாற்றாது. சிலுவையில் இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மீதான விசுவாசம் மட்டுமே பாவத்திலிருந்து சுத்திகரிப்பை நிறைவேற்றி, பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நம்மை ஏற்றுக்கொள்ளும். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரிந்தியர் 5:21).

English



முகப்பு பக்கம்

ஷின்டோயிசம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries