settings icon
share icon
கேள்வி

பலதெய்வக் கோட்பாடு என்றால் என்ன?

பதில்


பல தெய்வங்கள் உள்ளன என்ற நம்பிக்கை பலதெய்வக் கோட்பாடு ஆகும். "போலி" (poly) என்ற வார்த்தையை பிரித்து எடுப்போமானால், அது "பல" என்கிற அர்த்தமுடைய கிரேக்க வார்த்தையிலிருந்தும், "தீய்சம்" என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து "தேவன்" என்பதும் வருகிறது. மனித வரலாற்றில் பலதெய்வக் கோட்பாடு ஆதிக்கம் செலுத்தும் ஆத்திகப் பார்வையாக இருக்கலாம். பண்டைய காலங்களில் பலதெய்வத்தின் சிறந்த உதாரணம் கிரேக்க / ரோமானிய புராணங்கள் (ஜீயஸ், அப்பல்லோ, அப்ரோடைட், போஸிடான் போன்றவை). பலதெய்வத்தின் தெளிவான நவீன உதாரணம் இந்து மதம், இது 300 மில்லியனுக்கும் அதிகமான கடவுள்களைக் கொண்டுள்ளது. இந்து மதம், சாராம்சத்தில், எல்லாம் இறைக் கொள்கை தன்மை கொண்டதாக இருந்தாலும், அது பல கடவுள்களின் நம்பிக்கைகளை வைத்திருக்கிறது. பலதெய்வ மதங்களில் கூட, ஒரு கடவுள் பொதுவாக மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர், உதாரணமாக, கிரேக்க / ரோமானிய புராணங்களில் ஜீயஸ் மற்றும் இந்து மதத்தில் பிரம்மா.

பழைய ஏற்பாட்டில் பலதெய்வக் கோட்பாடு பற்றி வேதாகமம் கற்பிக்கிறது என்று சிலர் வாதிடுகின்றனர். பல பத்திகளில் பன்மையில் “தெய்வங்களை” குறிப்பிடுகிறார்கள் (யாத்திராகமம் 20:3; உபாகமம் 10:17; 13:2; சங்கீதம் 82:6; தானியேல் 2:47). பண்டைய இஸ்ரேல் ஒரே ஒரு உண்மையான தேவன் மட்டுமே என்பதை முழுமையாக புரிந்து கொண்டார்கள், ஆனால் அவர்கள் பெரும்பாலும் உண்மை என்று நம்புவதைப் போல வாழவில்லை, தொடர்ந்து விக்கிரகாராதனையிலும், அந்நிய தேவர்களை வணங்குவதிலும் விழுந்தார்கள். எனவே பல கடவுள்களைப் பற்றி பேசும் இவற்றையும் பிற பத்திகளையும் நாம் என்ன செய்ய வேண்டும்? ஏலோஹிம் என்ற எபிரேய வார்த்தை ஒரு உண்மையான கடவுளைக் குறிக்கவும், பொய்யான தெய்வங்கள் / சிலைகளை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது "கடவுள்" (God) என்ற ஆங்கில வார்த்தையுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக செயல்பட்டது.

எதையாவது "கடவுள்" என்று விவரிப்பது என்பது ஒரு அதை ஒரு தெய்வீகத்தன்மையுள்ள ஜீவன் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று அர்த்தமல்ல. தேவனைப் பற்றி பேசும் பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களில் பெரும்பாலானவை பொய்யான கடவுள்களைப் பற்றி பேசுகின்றன, தெய்வங்கள் என்று கூறிக்கொள்கின்றன, ஆனால் இல்லை. இந்த கருத்து 2 ராஜா. 19:18 இல் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது: "அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்." சங்கீதம் 82:6-ஐ கவனியுங்கள், “நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.”

பலதெய்வத்திற்கு எதிராக வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது. உபாகமம் 6:4, “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” என்று சொல்லுகிறது. சங்கீதம் 96:5 அறிவிக்கிறது, "சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்." யாக்கோபு 2:19 கூறுகிறது, “தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.” ஒரேஒரு தேவன் மட்டுமே இருக்கிறார். பொய்யான தெய்வங்களும், கடவுளாக நடிப்பவர்களும் இருக்கிறார்கள், ஆனால் ஒரேஒரு தேவன் மட்டுமே இருக்கிறார்.

English



முகப்பு பக்கம்

பலதெய்வக் கோட்பாடு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries